கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை/சசிகலா விஸ்வநாதன்


  1. கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை.
    கவிதைகள் அதற்காக அழுவது இல்லை.
    தம் பெருமை அவற்றுக்குத் தெரியும்.
    வானவில்லை நாணேற்றுவது யார்?

2.
கவிதை புத்தகங்கள் விற்பது இல்லை.
விற்பதற்காக எழுதப் படுவதும் இல்லை;
அனைத்தும் பரிசாய் கொடுக்கப் படுவதற்கே;
கையெட்டும் இடத்தில் இருப்பதால்.


3.

கவிதை புத்தகங்கள்
விற்பது இல்லை.
தாழ்ந்தவை இல்லை
அவை,எந்நாளும்;
வாழ்க்கை நலன் புகட்டும் எப்போதும்;
கழுதை அறியாது கற்பூரம்.


  1. கவிதை புத்தகங்கள்
    விற்பது இல்லை.
    மலின ரசனைக்கு
    எழுதப் படவில்லை.
    விற்காவிடில் பாதகம் ஒன்றும் இல்லை.
    உயர் பொருள் எவரறிந்தார்?

5.

கவிதை புத்தகங்கள் விற்பது இல்லை.
கவிஞர்களின் பழக்கம் கவிதை எழுதுவது.
மிக நல்ல கவிதை
என்ற நினைப்பில்;
நல் நினைவே இன்பம்.


6.

கவிதை புத்தகங்கள்
விற்பது இல்லை.
கதை புத்தகங்களையும் கொள்வோர் இல்லை.
தமிழ் படிப்போர் தகவிலார் என்பதாலா?
தமிழர் தரம் உயரட்டும்.


2 Comments on “கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை/சசிகலா விஸ்வநாதன்”

Comments are closed.