வேறு வேறு உலகங்கள்

 

லாவண்யா சத்யநாதன்

அடுத்த இருக்கையில்

அமர்ந்து இருந்தவனோடு

அளவளாவி

அற்புதம் ஏதும் நிகழாதென்று

அவனும் நினைத்தான்

இவனும் நினைத்தான்.

இருவரும் வேறு வேறு

உலகங்களில் இருந்தனர்