வினை புரி                                           

  எஸ்ஸார்சி


காரியங்கள் ஆயிரமுண்டு

செயலாற்றிட ஓயாது

முனைகிறது மனம்

கொள்ளையாய்  இடையூறுகள்

அடுக்கித்தான் வருகின்றன அவை

அத்தனையும் வென்றாக

வேண்டுமே நீ 

வேறில்லை

வெல்லும் மார்க்கம் 

மந்திரத்தில் காய்க்காது மாங்காய்

வானத்திலிருந்து குதிக்காது

யோசனைகள்

உன்கை பிடித்து  எழுதாது

வழிபாடும் வந்தனமும்

யார் துணைக்கு வருவார்

எட்டி ஏன் பார்க்கிறாய் நீ

வரமாட்டார் யாருமே

அறிந்திடுவாய் காலத்தே

வினை ஆற்று

உறுதிசெய் நின் முடிவை

தொடங்கு நின் செயலை

சாக்கும் போக்கும்

சொல்லி ஓய்ந்து உறங்காதே

கை கட்டி நிற்காது  காலம்.