சில காதல்கள் இணைவதற்காக இருப்பதில்லை…./ஹிந்தியில் : அர்ஷிதா/தமிழில் : வசந்ததீபன்

அவைகள் இருப்பதில்லை
உடன் செல்வதற்காக.
அவைகள் வனவாசத்தை கழிப்பதற்காக
சொல்ல முடியாததும் கேட்க முடியாததும் வாழ்வதற்காக இருக்கின்றன.

அவைகள் ஒன்றையொன்று பூர்த்தி செய்தாலும்
முழுமையற்று வாழ்வதற்காகவே இருக்கின்றன

அவைகள் மட்டும் இங்கே சந்தோஷம்
பெறுகின்றன
என அவைகள் ஏதாவதொரு இருதயத்தில் இருக்கின்றன
என அவைகள் ஏதாவதொரு மூளையில் இருக்கின்றன
என யாரோ ஒருவன் அவற்றின் நினைவுகளை நெய்கிறான்
என யாரோ ஒருவர் அவற்றிற்காக
அல்லது ஈரமான கண்களை திரும்ப எடுத்துக் கொள்கிறான்.
சில காதல்கள் உற்சவததை கொண்டாடுவதில்லை
ஆனால் அவைகள் நோன்பு நோற்கின்றன
மேலும் இரண்டு வாய் அன்பு அவற்றை வாழ வைக்கின்றன.

காதல் ஒரு சித்தப்பிரமை.
🦀