
பருவமழைக்காலத்தில்
நிரம்பாத ஊர்கிணறுகள்
சற்றும் எதிர்பாராத
காலத்தில் பெய்த
தொடர் கோடை மழையில்
நிரம்பி வழிந்ததை
வேளார்குளத்துக் குடிகள்
ஊர்க்கதையாகப் பேசித் திரிய
ஆலமரத்தடி ஊமை சுடலை பூசாரியின்
ஆவலாதியெல்லாம்
மழை இப்படி மண்பூடங்களைக்
கரைத்துவிட்டதே என்பதுதான்
