வழிபாட்டுத் தலம் அது;
காலை வழிபாடுகள் முடிந்து
கதவுகளை மூடியாயிற்று;
இனி மாலையில்தான் திறப்பார்கள்;
அதன் வாசலில் இருக்கிறாள்
அந்த மூதாட்டி;
மெலிந்த உடலில்
கந்தையை உடுத்தியிருக்கிறாள்;
கலைந்த கூந்தல்
வறண்டு கிடக்கிறது;
உள்ளே நோக்கி
உட்கார்ந்துகொண்டு
முணுமுணுத்து ஏதோ
பிரார்த்தனை செய்கிறாள்;
அவளுக்கு உள்ளே
அனுமதி இல்லையா?
கூச்சம் கொண்டு அவள்தான்
உள்ளே நுழைவதில்லையா?
நாள் பலவாக நடந்துகொண்டிருக்கிறது
அவளின் பிரார்த்தனை.