கு. மா. பா. திருநாவுக்கரசு
என்பா 1
எலியைப் பிடிக்க விரட்டியது பூனை!
வளைபோன்ற குழாயுள் பதுங்கியது எலி!
வேட்கையில் பாய்ந்த பூனையின் தலை,
குழாய்வாயில் மாட்டியதே விதி
என்பா – 2
பன்முகத் தன்மையின் பெருமிதம் கொள்வார்!
தன்மொழி இனத்தை உயர்த்திப் பிடிப்பார்!
இன்னொரு நிகரை இரண்டாம் தரமாய்
எண்ணுவது இகழ்ச்சி அன்றோ?
என்பா – 3
கோவிலில் குடியிருந்தும் குங்குமம் வைப்பதில்லை!
தேவாலயத்தில் வசித்தும் சிலுவை போடுவதில்லை!
மசூதியில் வாழ்ந்தும் நமாஸ் செய்வதில்லை!
புறாக்களுக்கு படியளப்பது யார்?
