நகுலனின் சுருதி கவிதைகள்

நகுலன்

இவைகள் (2)

இந்திர கோபம்
இது ஒரு பூச்சியின் பெயர்
உக்கிரப் பெருவழுதி
இது ஒரு அரசன் பெயர்
யோக நித்ரை
இது ஒரு தத்துவச் சாடு.

இவர்கள்
பார்வையில்
தினம் தினம்
நான்
பட்டுத் தெறிக்க
வேண்டும்
என்ற அவசியம்?