கவிதை-1
இந்த வெயிலில் வெளியே
வேண்டாம்;
இந்த மழையில்
வெளியே வேண்டாம்;
விவசாயி என்னதான்
செய்வான்; அவன்
பிழைப்பு வெயிலிலும் மழையிலும்.
கவிதை-2
இந்த வெயிலில் வெளியே வேண்டாம்;
காகம் புறா இரை தேடும்
ஆவினம் மேய்ச்சல்
போகும் நேரம்
மனிதன் முடங்கட்டும், வீட்டில்.
கவிதை3
இந்த வெயிலில் வெளியே வேண்டாம்;
வெப்ப வெளி சிசுவாய்
பிறந்து..
நிழல் தவம் வேண்ட; நம்மை,
வைகாசி மாரி அணைக்கும்.
கவிதை-4
இந்த வெயிலில் வெளியே வேண்டாம்
அரசு அலுவல் நேரம் இதுவே..
வங்கி அலுவல் நேரமும் இதுவே…
வெளியே போக வேண்டியதே!
கவிதை-5
இந்த வெயிலில் வெளியே வேண்டாம்.
இளநீர்காரன், நுங்கு விற்பவன் கரும்பு சாறெடுப்பவன்
ஐஸ்கிரீம் அண்ணன்
இவர்கள், என்னை
எதிர்பார்த்தல்வோ கடை விரித்துள்ளார்கள்!
அருமை.எல்லோரும் உணரவேண்டும்.
அருமை