கடகட கடகட கட கட கடகட /சசிகலா விஸ்வநாதன்

என்பா-1

கடகட கடகட கட கட கடகட

என வானத்தில் இடி இடிக்க,

சட சட சட சட

என மழை தூற்றல்

என்பா-2

கடகட கடகட கடகட கடகட

கட, என அவர் சிரிக்க;

பட பட பட பட

என மனம் துடிக்கிறது.

என்பா3

கடகட கடகட கடகட கடகட;

நான்கு மாடி கட்டிடம் சரிய;

சர் சர் சர் என

வண்டிகள் வந்து நின்றன.

என்பா-4
கடகட கட கட கடகட கட கட;

என பேனா எடுத்தேன், கையில்

மட மட மட மட

என்று தோணியதை
எழுதினேன்.

என்பா-5
கடகட கடகட கடகட கடகட;

என வாய்ப்பாடு என் மகவு ஒப்பிக்க,

பட பட பட என


( 6)

கடகட கடகட கடகட கடகட

என பொங்கும்புனல் தடாகம்;

பேரருவி ஊடுருவும்
வெண் முகிலின் ” “பளிச்”;

ஒளியை வெட்டும்
வானவில்.

              (7)

கடகட கடகட கடகட கட

சரளையாய் அருவி
கல் கல்;

என தலையில்
இறங்க, எண்ணைய்

வைத்த தலை பறக்கும்

            (8)

கடகட கடகட கடகட கடகட

என ஐந்தருவிக்கு
நடை பயில

பலா சுளை
வாசனை மூக்கைத்

துளைக்க; ஆ! இன்பமது.

            (9)

கடகட கடகட கடகட கடகட

என்றே,கம்பூன்றி,
செண்பக அருவி

சேர்ந்து, ஒற்றை
அருவியில், ஏகாந்த

குளியல்; ஒரு ஆனந்தம்!

             (10)

கடகட கடகட கட கட கட

என்னாமல்,மெல்லனே,
மெல்லனே, முட்டி

தேய, மேலேறி,
கொம்புத் தேன்

சுவைக்க, குறவனுமேறா
குன்றல்லவா?

2 Comments on “கடகட கடகட கட கட கடகட /சசிகலா விஸ்வநாதன்”

Comments are closed.