
அரை குறையாய்
வண்டி ஓட்டி
பழகியவள்
கோயில்
திருவிழாப் பாதையில்
எதிர்பாராமல்
நுழைந்துவிட்டால்
எப்படி திக்குமுக்காடுவாளோ
அப்படியாகத்தான்
என் மனம்
கையேந்தி நிற்கும்
சிறுமியிடம் திணறுகிறது
காசு இல்லாத நேரத்தில்

அரை குறையாய்
வண்டி ஓட்டி
பழகியவள்
கோயில்
திருவிழாப் பாதையில்
எதிர்பாராமல்
நுழைந்துவிட்டால்
எப்படி திக்குமுக்காடுவாளோ
அப்படியாகத்தான்
என் மனம்
கையேந்தி நிற்கும்
சிறுமியிடம் திணறுகிறது
காசு இல்லாத நேரத்தில்
Comments are closed.
நல்ல உவமை
ரசித்தேன்