உடை/அழகியசிங்கர்

இதுமாதிரி கவர்ச்சியாக உடை அணிந்து நடிக்க வேண்டுமென்று சொன்னபோது முதலில் தயங்கினாள் நடிகை ரம்யா.

“இதுமாதிரி காட்சியெல்லாம் படத்தின் கதைப்படி தேவையில்லை” என்றாள் டைரக்டரிடம்.

“எதுமாதிரியான காட்சி வேண்டும் அல்லது வேண்டாம் என்பது உனக்குத் தெரியுமா அல்லது எனக்குத் தெரியுமா?” என்றார் கோபமாக டைரக்டர்.

“நடிக்கப் போவது நான்தானே..”

அதன்பின் நடிகை ரம்யா படப்பிடிப்புக்கு வரவில்லை. யார் கூப்பிட்டாலும்.

டைரக்டர் கெஞ்சிப் பார்த்தார்.

முடியாது என்று மறுத்தாள் ரம்யா.

நடிப்பதற்காக வாங்கிய
அட்வான்ஸ் தொகையைத் திருப்பித் தருவதாக தயாரிப்பாளரிடம் சொன்னாள்.

“கொஞ்சம் யோசனை செய்யுங்கள்” என்றார் தயாரிப்பாளர்.

ரம்யா ஒன்றும் பேசவில்லை.

சில மாதங்கள் கழித்து நடிகை ரம்யாவிற்குப் போன் செய்தார் தயாரிப்பாளர்.

“அந்த டைரக்டரே மாத்திட்டேன்..நீங்க நடிக்க வாங்க..” என்றார்.

நடிகை ரம்யா நிம்மதி மூச்சு விட்டாள்.