
தமிழில் : க.மோகனரங்கன்
கனவிலொரு திருமணத்தைக் கண்டேன்
நீதான் மணமகளெனவும் நினைத்தேன்.
மணக்கோலத்தில் நீயும், வாசல்முகப்பில் யாசகனாய் நானும் – இது மெய்யாகவும் இருக்கலாம்!
கனவில் கண்டாற்போலவே அது நிகழட்டும் !
ஒரு வாக்கினை மாத்திரம்
நீ காத்தருள வேண்டும்.
முன்வாயிலில் நிற்குமென் கைகளில் –
இரக்க மிகுதியால்
தானமென எதனையும் அப்போது தந்துவிடாதே !
