இனிக்கும் தமிழ்- 182/டி வி ராதாகிருஷ்ணன்

பட்டினத்தார் – எரிந்த கட்டை மீது எரித்து

நான் பெரியவன்
நான் மெத்த படித்தவன்
புகழ் பெற்றவன்
எனக்கு இருக்கும் சொத்தின் மதிப்பு ..எவ்வளவு என்றே தெரியாமல் கோடிக்கணக்கில் ,
இப்படி “நான்” என்பது எல்லோருக்கும் இப்போது இருக்கிறது.

ஒன்றை நினைவில் வையுங்கள்

நம்மை விடவும் பெரிய பெரிய அரசர்கள் இதற்க்கு முன்னால்
இருந்திருக்கிறார்கள். அப்படி பட்ட மன்னர்களையும், அவர்கள் இறந்த பின்,
புது இடத்தில் கூட இல்லை முன்பு ஏதேதோ உடல்களை எரித்த அதே இடத்தில்
வைத்து, கட்டி இருந்த உள் ஆடைகளை கூட எடுத்து விட்டு எரித்து சாம்பலாக்கி
இருக்கிறார்கள். நாம் எல்லாம் எம்மாத்திரம்.

அதை எல்லாம் பார்த்த பின்னும் , வாழ்க்கையில், இந்த சுக போகங்களில், இந்த
பிறவியில் இன்னுமா உங்களுக்கு ஆசை என்று கேட்க்கிறார் பட்டினத்தார்…

பாடல்

இன்னம் பிறக்க இசைவையோ நெஞ்சமே ?
மன்னர் இவர் என்றிருந்து வாழ்ந்தாரை – முன்னம்
எரிந்தகட்டை மீதில் இணைக்கோ வணத்தை
உரிந்துருட்டிப் போட்டது கண்டு !

பொருள்

மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு ஒப்புக் கொள்வாயா? மனமே! மன்னர் இவர் என
வாழ்ந்தவர்களை,முன்பு எரித்த கட்டை மேல்..கட்டியிருந்த உள் ஆடையையும்
..உரித்து எடுத்த பின்,அந்த உடலை உருட்டி போட்டதை கண்ட பின்னும்