என் அப்பா/சசிகலா விஸ்வநாதன்

என் அப்பா ..

அவருக்கு நான் எந்த
வகுப்பு

படிக்கிறேன் என்பதே தெரியாது..நிசம்தான்.‌

யாரேனும் வந்தால்
எத்தனாப்பூ நீ

என்று கேட்பார்.
ஒன்று மட்டும்

தெரியும் அவருக்கு;
சிறுக்கும் என் முகம்

கண்டு;கசங்கும்
மனம் அறிவார்

எப்படியோ; என்ன
மாயமோ; என்

சங்கதி அனைத்தும்
சொல்லாமலே அறிவார்;

அவர் மடி பஞ்சணை
எந்நாளும்

எனக்கே, சந்தன பௌடர் வாசம்
இன்றும் என் தலையணையில்.


18-6-2023

One Comment on “என் அப்பா/சசிகலா விஸ்வநாதன்”

Comments are closed.