
(1)
அரிசி சோறு அறவே இல்லை;
கேப்பங்களியும் கம்பங்கூழும் காலையும் மாலையும்
சர்க்கரை அளவு என்றும் ஏறுமுகம்
இனி என்ன செய்வது?
(2)
பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து;
அயல் நாடு அனுப்பி திருமணம் செய்வித்து;
பணி அயர்வில் இல்லமதில் ஓய்ந்தாயிற்று.
இனி என்ன செய்வது?
(3)
நமசிவாயம் நாளும்
நயமாய் ஓதியாகிறது;
சிவனே! சிவனே சித்தம் என்னும்;
அறிவம்பலத்தில்
ஆனந்த நடனம் காண;
இனி என்ன செய்வது?
29-6-2023
