இனி என்ன செய்வது?/சசிகலா விஸ்வநாதன்

            (6)

தமிழ் இலக்கணம்
இலக்கியம் கற்க;

யாப்பிலக்கணமும் கற்க; ஒரு ஆசானிடம்;

இவை போதுமா கவிதை ஆக்க;

இனி என்ன செய்வது?

              (7)

அம்மா முகம் பார்த்து செயல்

அத்தனையும் செய்தே பழகிவிட்டது; அவள்

சொல்லின்றி
எதுவும் செய்ய இயலவில்லை;

இனி என்ன செய்வது!

           (8)

கதிரவன் உதயம்
தரும் ஒளி

மலர்ந்த சிவந்த பூவின் அழகு

கையின் வித்தகம்
பலவும் பார்த்தாயிற்று

இனி என்ன செய்வது?

               (9)

இல்லத்தின் மூத்த மகன் திருமணம்

ஏகாதசி இன்று
என்று உபவாசம்

இருக்கும் அவர்;
பிடிவாதத்திற்கு மருந்துண்டா?

இனி என்ன செய்வது?

             (10)

காரைக்குடியில் அரண்மனை வீடு இருந்தும்;

டுபாய் நாட்டில் கட்டுமான பணி;

பார்த்து அலுத்து
திரும்பினான்; காரைக்குடிக்கே;

இனி என்ன செய்வது?


29-6-2023

3 Comments on “இனி என்ன செய்வது?/சசிகலா விஸ்வநாதன்”

  1. டுபாய் நாட்டில் பயணம் வதை,காரைக்குடிக்கு திரும்புதல் இதம்.எல்லாம் முடிந்து விட்டது இனி என்ன செய்ய?

Comments are closed.