(6)
தமிழ் இலக்கணம்
இலக்கியம் கற்க;
யாப்பிலக்கணமும் கற்க; ஒரு ஆசானிடம்;
இவை போதுமா கவிதை ஆக்க;
இனி என்ன செய்வது?
(7)
அம்மா முகம் பார்த்து செயல்
அத்தனையும் செய்தே பழகிவிட்டது; அவள்
சொல்லின்றி
எதுவும் செய்ய இயலவில்லை;
இனி என்ன செய்வது!
(8)
கதிரவன் உதயம்
தரும் ஒளி
மலர்ந்த சிவந்த பூவின் அழகு
கையின் வித்தகம்
பலவும் பார்த்தாயிற்று
இனி என்ன செய்வது?
(9)
இல்லத்தின் மூத்த மகன் திருமணம்
ஏகாதசி இன்று
என்று உபவாசம்
இருக்கும் அவர்;
பிடிவாதத்திற்கு மருந்துண்டா?
இனி என்ன செய்வது?
(10)
காரைக்குடியில் அரண்மனை வீடு இருந்தும்;
டுபாய் நாட்டில் கட்டுமான பணி;
பார்த்து அலுத்து
திரும்பினான்; காரைக்குடிக்கே;
இனி என்ன செய்வது?
29-6-2023
Good
டுபாய் நாட்டில் பயணம் வதை,காரைக்குடிக்கு திரும்புதல் இதம்.எல்லாம் முடிந்து விட்டது இனி என்ன செய்ய?
அம்மாவின் அறிவுரை இல்லாதது வதை.