துரிதக் கவிதைகள்/புவனா சந்திரசேகரன்

1.கல்யாண விருந்தில் பசியில்லை!

2.ஓடியோடி காலத்தைக் கடத்தும்
கடிகார முட்கள்!

3.முதியோர் இல்லங்களில்
அனுபவங்களின் அணிவகுப்பு!

4.வெட்டியான் வீட்டில் சாவு!

  1. வட்டில் கஞ்சியை சுவையாக்கும்
    ஏழையின் கண்ணீர் !

6.நூலகப் புத்தகங்களின்
பக்கங்கள் கசங்கவில்லை!

7.இரவுக் காவலர்களாக
என்றும் மின்மினிப் பூச்சிகள்!

8.குடம் குடமாகப் பாலாபிஷேகம்

9.மழலை கையில் எழுதுகோல்
விதவிதமான சித்திரங்கள்!

10.கல்வித் தொழிற்சாலை வாசலில்
புத்தக மூட்டைத் தொழிலாளிகள்!

One Comment on “துரிதக் கவிதைகள்/புவனா சந்திரசேகரன்”

Comments are closed.