சேக்கிழார் பாடல் ஒன்று
நீரைப் பிரிந்த மீனைப் போல உன்னை பிரிந்து வெறுமையில் தவிக்கிறேன்.
பொங்கி வரும் கங்கை நீரில் மிதக்கும் ஓடத்தைப் போல உன் தலையில் உள்ள
ஆகாய கங்கையில் பிறைச் சந்திரனை கொண்டவனே, என்னை கைவிட்டு விடாதே.
பாடல்
பெருநீ ரறச்சிறு மீன்துவண் டாங்கு நினைப்பிரிந்த
வெருநீர்மை யேனை விடுதிகண் டாய்வியன் கங்கைபொங்கி
வருநீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின்வெள்ளைக்
குருநீர் மதிபொதி யுஞ்சடை வானக் கொழுமணியே
பொருள்-
பெருகி வரும் நீர் வற்றி விட..அதில் இருந்த சிறுமீன் உயிருக்கு
துடிப்பது போல,உன்னை விட்டுப் பிரிந்த பயம் கொள்ளும் என்னை விட்டு
விடாதே!,
பெரிய கங்கை பொங்கி வெள்ளம் வருகின்ற போது, தேங்கிய நீரில் மலைத்து
நிற்கும் சிறு தோணி போல, வெண்மையான பிறைச் சந்திரனை
பொருந்தி வைத்து இருக்கும் சடையைக் கொண்ட வானில் உள்ள சிறந்த மணி போன்றவனே
(அது ஏன் பிறை சந்திரன் ?
ஒரு முறை சந்திரன் தவறு செய்தான். நாளும் ஒரு கலையாக தேய்ந்து அழியும்படி
சபிக்கப்பட்டான்.
மூன்றே கலைகள் இருக்கும் போது கடைசியில் சிவனை தஞ்சம் அடைந்தான்.
அவர், அவனை மன்னித்து தன் தலையில் சூடிக் கொண்டார். அவன் அழிவு தவிர்க்கப்பட்டது.
எவ்வளவு தவறு செய்து இருந்தாலும், தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் ,
பாவ விமோசனம் தருவான் அவன்.
காலில் விழுந்த சந்திரனை தலையில் தூக்கி வைத்தார்.)
-
மனித பிறவி வதை.இறைவன் இதம்.