
எந்த கவியரங்கிலும் எனக்கு என்ன சொல் கிடைப்பதேயில்லை !
எந்த சொற்களிலும் என் உணர்வு பதிவாவதேயில்லை!
எந்த பாட்டிலும் எனக்கான ராகம் இல்லை!
எந்த வானிலும் எனக்கான நட்சத்திரங்களும் இல்லை !
என் கவிதையை
எனக்கே
எனக்கான
ஒரு சொல்லை
ஐந்தாம் திசையில் எட்டாம் கடலில்
ஏதோ ஒரு திசையில் தேடிக் கொண்டேதான் இருக்கிறேன்
அலுப்பு களைப்பிலா
தேடும் தீரா பயணம்..
21/07/2023
