மரப்பாச்சி/சசிகலா விஸ்வநாதன்

செம்மர மரப்பாச்சி
சோடி ஒன்றும்..

கருங்காலி மரப்பாச்சி
சோடி ஒன்றும்;

உலாப்போகும்
திருவீதி உலா

வருடா வருடம்
பத்தே நாட்கள்.

பள பள சட்டை
பட்டில் தலைப்பாகை;

கருக்கரிவாள் போல்
முறுக்கிய மீசை;

ராசாதி ராசரை என்றும்,
பிரியாமல் இருக்கும்;

பேரரசிகளும் பெருமிதமாய்,
பதவிசாய், கொலுவிருப்பர்;

ஆயினும், அவர்களுக்கே
முதல் தாம்பூலம்!

பொம்மையாய் இருந்தாலும்;
அரசர்க்கு உரிய

அனுபோகம் அவருடையதே;
வேறு எவர்க்கு?