
என்பா 149
எருமை ஏன் கத்திக்
தொலைக்கிறது
காலையில்
மடிப்பாக்க மொட்டைமாடியில்
நடந்து
கொண்டிருந்தேன்.
தூரத்தில் குட்டையில்
எருமைமாடுகள்.
ஒன்றுமட்டும் கத்திக்கொண்டிருந்தது
என்பா 150
எருமை ஏன்
கத்தித் தொலைக்கிறது
எப்போது எத்தனை
மணிக்கு வந்தன
குட்டைக்கு. ஒன்றுமட்டும் நிச்சயம் குட்டையில்
தடுமாறும் எருமை மாடு
என்பா 151
எருமை ஏன்
கத்தித் தொலைக்கிறது
கத்தினால் என்ன
கத்தாவிட்டால் என்ன
என் காதை
கத்தல் குடைகிறது
பாவம் அந்த ஜீவன்

எருமையின் கத்தல் வதை.உயிரின் மீதான அன்பு இதம்.