எருமை ஏன் கத்தித் தொலைக்கிறது?/சசிகலா விஸ்வநாதன்

               ( 1)

எருமை ஏன் கத்தித் தொலைக்கிறது?

“கொசுத் தொல்லை தாங்க இயவில்லை;

சற்றேனும் தொழுவீட்டை துப்புரவு
செய்யலாகாதா?”

என்று அது கேட்கிறது.

             (2)

எருமை ஏன் கத்தித் தொலைக்கிறது?

விற்று விட்டேன் அதை; காசுக்காக;

பிரிவாற்றாமை துயருடன் அது கத்துகிறது.

நானும் துயருடன் கண்ணீரில்.

             (3)

எருமை ஏன் கத்தித் தொலைக்கிறது?

என் துயரம் எவர் அறிவர்?

எந்நேரமும் ஏச்சும்,
பேச்சும்; நான்

அளிக்கும் அமுதம் கசக்கிறதா?

       ‌.  (4)

எருமை ஏன் கத்தித் தொலைக்கிறது?

என் கண்ணாடி கண்கள் வனப்பானதே!

என் மின்னும் கருமை பொலிவானதே!

என்னிடம் ஏன் அருவெறுப்பு?

           (5)

எருமை ஏன் கத்தித் தொலைக்கிறது?

தவறாமல் தவிடும் புண்ணாக்கும் வைக்கும்

கோனார் இன்னும் வாராத வருத்தம்தான்;

வேறென்ன இருக்கக் கூடும்



6)
எருமை ஏன் கத்தித் தொலைக்கிறது?

எத்தனை நேரம் குட்டையில் நிற்க?

வைக்கோல் பிரி
காய்ந்து விட்டது;

அவளுடன் பேசி முடியவில்லையா?

One Comment on “எருமை ஏன் கத்தித் தொலைக்கிறது?/சசிகலா விஸ்வநாதன்”

Comments are closed.