
நேற்றைய ‘ சொல் புதிது ‘ நிகழ்வில் சொல்ல நினைத்த கவிதைகள்
——-
அஞ்சறைப் பெட்டி
————————–——
பிறந்த வீட்டின்
பெருமை உணர்வு
நாத்தனார் மாமியார்
நர்த்தன நாடகம்
இரண்டும் கெட்டான்
கணவன் பார்வை
ஏங்கும் அன்பின்
இரைச்சல் சப்தம்
எல்லாம் போட்டு
மூடி வைக்க
அடுப்படி அறையில்
அஞ்சறைப் பெட்டி
———-
அக்னிச் சூடுகள்
—————————-
தம்ளர் ஒன்று தூக்கில்
தொங்கும் தனியாக
குற்ற உணர்ச்சியின்றிக்
கடந்து போவார் பலர்
குளிர்ந்த தம்ளர் தான்
கொதிக்கும் உள்ளே
தம்ளரின் உள்ளே
தகிக்கும் பகையின்
அக்னிச் சூட்டின்
வெப்பம் வெளியேறும்
————
