
யானை வரும் பின்னே,
மணியோசை வரும் முன்னே!
அசைந்து அசைந்து நடக்கும் அழகே அழகு!
யானை முகத்தினை
மனை முன் வைத்தால் திருஷ்டி தோஷங்கள் அணுகாது என்று நம்பிக்கை.
யானை முகத்தோனை முழுமுதல் கடவுளாக காண்கிறோம்.
யானை மேல் தெய்வத்தின் ஊர்வலம் , சேர நாட்டில் சீவேலி.
யானை கொள்ளை கொள்ளும் அழகு
குழந்தைகளின் குதூகலம்.
சிறுத்த கண்களும்
முறம் போன்ற செவிகளும்,
முன் ,இடம் வலம்
ஆடி வரும் தும்பிக்கை,
பெருத்த உடலும், கொம்பும்,
ஆறுக்கும் அறுபதுக்கும் ஆனந்தம்.!!
