சாதி தேவையோ/இலத்தூர் கி.சங்கரநாராயணன்

சாதி என்பது சிறுகதை தான் அது
மீதியான பழங்கதைதான்
ஆதியில் சாதியை விதைத்தவர்கள்
பாதியில் மாண்டதை அறியாயோ?

நேர்மைக்குச் சாதியில்லை -உடல்
வேர்வைக்குச் சாதியில்லை – காதல்
பார்வைக்கும் சாதியில்லை-
பின் சாதிப்
போர்வைக்குள் நீ மட்டும் ஏன்?

அன்புக்குச் சாதியில்லை -உயர்
பண்புக்குச் சாதியில்லை -செய்யும்
வம்புக்கும் சாதியில்லை-
பின்
வீம்புக்குச் சாதிகள் ஏன்?

கருத்தை வெட்டியும் ஒட்டியும் பேசலாம்
சாதியால்
சிரத்தை வெட்டினால் ஒட்டிட இயலுமோ? உன்
சிரத்தையை பிறர் நலத்தில் காட்டு
உயிர்குடிச்
சிறுத்தையை நிறுத்து
அன்பால் திருத்து.

2 Comments on “சாதி தேவையோ/இலத்தூர் கி.சங்கரநாராயணன்”

Comments are closed.