யானை/சசிகலா விஸ்வநாதன்


தும்பிக்கை அற்ற
ஒரு கல் யானை,

மதுரை மேல கோபுர வாயிலில்:

என்றாவது கல் தும்பிக்கை மீண்டும்

முளைக்காதா; என்ற
நப்பாசையில்

நம்பிக்கை இன்றியும்,
நம்பிக்கையுடனும்;

தளராத நம்பிக்கைதானே வாழ்வு!


13-8-2023