இரு கவிதைகள்/எல்.ரகோத்தமன்

  1) பொத்தல்

கைகெகெட்டிய குடையின்
பொத்தல்களினூடே
கைக்கெட்டா வானம்
துண்டு துண்டாய் தெரிந்தது!

   *

 2) தருணம்

காற்று
நாம் விரும்பும் வேளையில்
விரும்பும் திசையில்
வீசுவதில்லை!
இரவில்
மொட்டை மாடியில்
அதிசயமாய் இன்று
ஜில்லென்று  காற்று 
வீசிக் களிக்கிறது!
குளிர்மையில்
நனையும் தருணத்தை
தவறவிட்ட  மனம்
பகலின் வெம்மையில்
புழுங்கியது!