பிரியா விடை/மாதவ பூவராக மூர்த்தி

                                              

எல்லாம் முடிந்துவிட்டது.  வேண்டியவர்களுக்கு சொல்லி அனுப்பி அவர்களும் வந்தும், வர இயலாதவர்கள் போனிலும் பேசியாயிற்று. . அம்மாவுக்கு பார்க்க வந்தவர்களைத் தெரியுமோ என்னமோ. கண்மூடி படுத்திருந்தாள். இந்த வீட்டுக்குரியவள், எதற்கும் சம்பந்தமில்லாதவள் போல் படுத்திருந்தாள்.எனக்கு மாலதி வரவில்லை என்று ஏக்கம். “வாசல்ல கொண்டுவந்து வைச்சுடுங்கோ”. மெதுவாக வாசலுக்கு வந்தேன். மாலதி வந்துவிட்டாள்.

என்முகம் தொட்டு கதறினாள்..யாரோ அவளை அம்மாவிடம் அழைத்துச்சென்றார்கள். “ போயிட்டானே” என்று அழுதாள் அம்மா.