
ஒரு ஞாயிற்றுக் கிழமை
கவிதை எழுத வேண்டுமென்று
நினைத்தேன்
அப்போது டூ வீலர்
ஓட்டிக் கொண்டு
சென்று கொண்டிருந்தேன்
முன்னால் சென்ற வண்டி பிரேக் போட
கீழே
தடுமாறி விழுந்தேன்
உலகமே ஒரு வினாடி
புரியவில்லை
கையில் அடி
கவிதை எங்கே எழுதுவது?
நல்லகாலம் கவிதை
வாசிப்பவர்கள் தப்பித்தார்கள்

நல்ல வேளையாக
நீங்கள் தப்பித்தீர்கள்