தனிமை-தூஃபூ

தமிழில் : க.மோகனரங்கன்

பருந்தொன்று
வானில் வட்டமிடுகிறது
இரண்டு வெள்ளை நாரைகள்
ஓடையில் மிதக்கின்றன.
சட்டென்று கீழிறங்கி நீரோட்டத்தில் முட்டாள்தனமாக அலைந்தவாறிருக்கும் அப் பறவைகளை
பற்றியெடுத்தவண்ணம்
காற்றில் மேலெழுந்து போவது எளிது.
புல்லில் பனிதுளிகள் பிரகாசிக்கும் இடத்தில்,
சிலந்தி வலையானது அதன் இரைக்காக காத்திருக்கிறது.
இயற்கையின் நடத்தையோ மனிதர்களின் வணிகத்தை ஒத்திருக்கிறது; பத்தாயிரம் துக்கங்களோடு நான் தனித்து நிற்கிறேன்.