கல்யாண்ஜி கவிதை

காமாட்சி அத்தைக்கு மனப்பிறழ்வு உண்டு.
காமாட்சி அத்தையை எல்லோரும் தேடுகிறார்கள்.
காமாட்சி அத்தை தொலைந்து
போகவில்லை.
காமாட்சி அத்தை காணாமல் போயிருக்கிறாள்
எங்கோ வேறொரு இடத்தில்
அவளை அவளே வைத்திருக்கிறாள்.

One Comment on “கல்யாண்ஜி கவிதை”

  1. காணும் மனம் ஒன்றும்
    காணும் ஆவலும் மீதுற்றால்
    காண்போருக்கு காணக் கிடைப்பாள்;
    அன்றோ; காமாட்சி அத்தை!

Comments are closed.