பணம் இல்லாதவர் பாடு/சசிகலா விஸ்வநாதன்


அழகிய சிங்கர் என்பா

             (1)

பணம் இருந்தும்,
மேலும் பணம்

சேர்க்க அவதியும்
ஆவலாதியும் கொண்டு,

பரிதவிக்கும் மனிதரை காட்டிலும்,
மேல்;

பணம் இல்லாதவர் பாடு

               (2)

குலதெய்வம் கும்பிட
குடும்பமாய் போனேன்.

பங்காளி முன்
பயந்தே நின்றேன்;

பங்குப்பணம்
கேட்க; என் செய்வேன்?

பணம் இல்லாதவர் பாடு

           (3)

பெண் கல்வி
பெரும் செல்வம்

எனத் தெரிந்தும்
வெறுமனே நிற்கிறேன்;

என்னால்
பணம் செலவு இயலாதே!

பணம் இல்லாதவர் பாடு.

            (4)                    

திருப்பதி சென்று
வர திருப்பம்

வரும் என்று
பல பேர் சொல்ல;

பல மணி காத்திருந்தேன்;
தர்மதரிசனம்!

பணம் இல்லாதவர் பாடு

             (5)

இஞ்சி பூண்டு
தக்காளி விலை,

இந்நாளில் அதிகம் என்றே; இன்றும்

பழையதும்,பச்சை
மிளகாய் சட்னி!

பணம் இல்லாதவர் பாடு.

One Comment on “பணம் இல்லாதவர் பாடு/சசிகலா விஸ்வநாதன்”

Comments are closed.