ஒரு கோலம்இரு கவிதைகள்/ எஸ். இட்லர்

எய்தும் அம்பில் நம்பிக்கையை வைப்பார் எய்பவர்,
வெற்றிக்காக

இது என்ன புது யுக்தி…
பூ வைத்து எய்துவது

கமலிக்குக் கதிரவன் மேல் காதலா?

ஓவியம்: பூர்ணலட்சுமி

இல்லை
கதிரவனைக் கொல்லக்
கொலை முயற்சியா?

                (2)

ஆ… ஆ

இந்த
பூ வைத்த
வில்லும் அம்பும்
அன்றே
எனக்குக் கிடைத்திருந்தால்

சீதை
என்னவளாகிருப்பாள்

இராமாயணம் கூட
என்னுடைய
காவியமாகியிருக்கும்…

3 Comments on “ஒரு கோலம்இரு கவிதைகள்/ எஸ். இட்லர்”

Comments are closed.