கசிந்துருகும் குழலிசை
காற்றில் பரவ…
ஆயர் பாடியில்
அவன் வருகைக்காய்
பசுக்கள் காத்திருக்க…!
மயிற்பீலியால்
சாமரம் வீசும்
கருமேக வர்ணன்
மாயக் கண்ணன்
எங்கே சென்றான்?!
மறைந்து நின்று
கண்ணாமூச்சி ஆடும்
அவனின்…
விளையாட்டில்
வெண்ணையாய்
மனம் உருகுதே!
சரணாகதியாய்
உன் திருவடி தேடியே
உள்ளமும்… நித்தம்
துளசி தீர்த்தமாய்
புனிதமாகுதே !
Very nice