ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 52/அழகியசிங்கர்

13.09.2023 – புதன் கிழமை

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

 மோகினி:   இப்போது என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

அழகியசிங்கர் : எதுவும் படிக்கவில்லை.

ஜெகன் :  ஏன்?

மோகினி :  நேரம் இல்லையா மனம் இல்லையா

அழகியசிங்கர் :  இரண்டும் இல்லை. விருட்சம் 123வது இதழை அனுப்பிக்கொண்டிருக்கிறேன். நூல் நிலையங்களுக்கு அனுப்பி விட்டேன். இன்னும் சந்தாதாரர்களுக்கு அனுப்ப வேண்டும்.

மோகினி :  நீங்க ஒருவரே எல்லாவற்றிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
அழகியசிங்கர் :  உண்மைதான்.
ஜெகன் :   ரொம்ப தாமதமாக எல்லா முயற்சியையும் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
அழகியசிங்கர்:  வாஸ்தவம்.
ஜெகன்  விருட்சம் 123வது இதழ் உங்களுக்குத் திருப்தியான இதழா?
அழகியசிங்கர் : என்னைப் பொறுத்தவரைத் திருப்திகரமான இதழ்.
மோகினி :  இந்த இதழ் எத்தனைப் பக்ககங்கள்?
ஜெகன் :  64 பக்கங்கள்.
மோகினி :  ஏன்?
அழகியசிங்கர் : ஒரு சிறுபத்திரிகை பக்கங்கள் அதிகமாக அதிகமாகச் செலவும் கூடிக்கொண்டே போகும்.  பத்திரிகையில் பெரிதாகச் சொல்லவும் இருக்காது.  ஆத்மாநாம் நடத்திய ' ழ'  பத்திரிகை 16 பக்கங்கள்தான்.. 
ஜெகன் : உண்மைதான். யுவன் சந்திரசேகருக்கு விஷ்ணுபுர விருது கிடைத்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அழகியசிங்கர் :  திறமையான எழுத்தாளர்.  கடுமையாக உழைப்பார். 
மோகினி :   நாளை வியாழக்கிழமை தாவோ தெ ஜிங் என்ற மொழிபெயர்ப்புப் புத்தகத்தைப் பற்றி எம்.டி முத்துக் குமாரசாமி பேசுகிறாரா?
அழகியசிங்கர் :  ஆமாம்.  அவர் மொழிபெயர்ப்பு முதலில நெருடல் இல்லாமல் வாசிக்க முடிகிறது.  அவருடைய நான்கு புத்தகங்களும் கவித்துவமாக இருக்கின்றன.  கடுமையான முயற்சியாக இருக்க வேண்டும்.  வாழ்த்துகள் அவருக்கு.
மோகினி :  இன்றைய  இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.
அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.
ஜெகன்: இன்று பேசியது போதும்.
அழகியசிங்கர்.  இரவு வணக்கம்.
                                                             இரவு 10.49 மணி 

One Comment on “ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 52/அழகியசிங்கர்”

Comments are closed.