
தெப்பக்குளத்தில் தொப்பென்று விழும்
எத்தனை பிள்ளையார்கள்
அவர் தொந்தியில் ஒட்டி இருக்கும்
ஒரு ரூபாய்க் காசுக்காக
சங்கடப்படாமல் சகதி நீருக்குள்
தேடி எடுத்துக் காண்பிக்கும்
நீச்சல் விளையாட்டில் மூழ்கி
மூச்சுத் திணறி மரணமான
நண்பன் நினைவும் வருகிறது
பிள்ளையார் தினத்தன்று .
