
1.
கடவுள் சித்தம்
இறப்பிற்கு காத்திருக்கும் முதுமை; ஏமாறும்!
வாழ்விற்கு காத்திருக்கும் இளமை; ஏமாறும்!
காத்திருப்பது, கையில் என்றும் கையகப்படாது.
கடவுள் சித்தம் எதுவோ?
2.
நல்லோரை எவ்வாறு
நான் அறிய?
நீ நல்லோன் ஆகு முதலில்;
உன் மாசு நீயே அறுக்க;
புலப்படுவார்; நல்லோர் உனக்கு
3.
நிலையற்ற நிலைதான் நித்தியம் எனின்;
நான் எங்கனம் நாட்களை கடந்து
வருவேன்? எந்த ஆதார மையமும்
இன்றி; என் செய்வேன்?
