ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 54/அழகியசிங்கர்

ஆசிரியர் பக்கம்

25.09.2023  – திங்கட் கிழமை

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

மோகினி:   நீங்கள் ஊருக்குப் படிக்க வேண்டுமென்று எடுத்துக்கொண்டு போன புத்தகங்களில் ஒன்றைக் கூடப் படிக்கவில்லையா?

அழகியசிங்கர் : ஒன்றையும் படிக்கவில்லை. 

ஜெகன் :  ஏன்?

மோகினி :  படிக்க வேண்டுமென்று தோன்றவில்லையா?

அழகியசிங்கர் :  அப்படி ஒரு மனநிலை படிக்க வேண்டாமென்று தோன்றி விட்டது.  

மோகினி :  ஆச்சரியமாக இருக்கிறது.  ஏன் அப்படித் தோன்றியது?

அழகியசிங்கர் :  காரணம் தெரியவில்லை.  படிக்கும்போதே நான் இப்படித்தான் புத்தகத்தை முடிக்காமலிருந்து விடுவேன்.

ஜெகன் :   இந்த முறை யாருக்குச் சாகித்திய அக்காதெமி விருதுக்கு நீங்கள் யார் பெயரை சிபாரிசு செய்வீர்கள்?

அழகியசிங்கர்:  தமிழவன் பெயரைத்தான் சிபாரிசு  செய்வேன்

ஜெகன்  ஏன்?

அழகியசிங்கர் : எல்லாவிதத்திலும் அவர் தகுதியான இலக்கியவாதி.  கதைகள் எழுதியிருக்கிறார்.  நாவல்கள் எழுதியிருக்கிறார். கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.  புதிய வகை விமர்சனமான அமைப்பியல் வாதத்தைத் தமிழுக்கு  அறிமுகப்படுத்தியவர். 

மோகினி :  என்னுடைய ஓட்டும் அவருக்குத்தான்.

ஜெகன் :  வித்தியாசமான எழுத்தாளர்.  நானும் கூட அவருக்குத்தான் ஓட்டுப் போடுவேன்.

மோகினி :  பரிசுக் கிடைக்கப் போய்ப் பார்க்க வேண்டியவர்களைப் போய்ப் பார்க்க வேண்டும். 

அழகியசிங்கர் :அந்த அரசியல்தான் நமக்குக் கடுப்பை ஏற்படுத்தும்.

ஜெகன் : உண்மைதான்.

அழகியசிங்கர் :  நான் அந்தப் பரிசைப் பொருட்படுத்தவில்லை.

மோகினி :   உங்கள் பணி எழுதிக்கொண்டிருப்பது.

அழகியசிங்கர் :  முடிந்தவரை.

மோகினி :  இன்றைய  இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.

அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.

ஜெகன்: இன்று பேசியது போதும்.

அழகியசிங்கர்.  இரவு வணக்கம்.

இரவு : 10.42 மணி