வேண்டுதல் /நாகேந்திர பாரதி

வனகாளி அம்மன்
திருவிழா

கோயிலில்
ஆடு வெட்டிப் பலி

வீட்டில்
கோழிக் குழம்பு
மீன் வறுவல்

மாட்டுத்தோல் செருப்போடும்
பட்டுத் துணியோடும்
தெரு முழுக்கக் கூட்டம்

ஊர் கூடிப்
படையல் வைத்துக்
கும்பிட்டுக் கேட்கும்

எங்கள்
எல்லா உயிர்களையும்
காப்பாத்து ஆத்தா

4 Comments on “வேண்டுதல் /நாகேந்திர பாரதி”

Comments are closed.