கேள்விக்காரன் கவிதை

எங்க ஊரு
ஆல மரம்

தாத்தன்
பாட்டன்
ஆல மரம்

கிளைகள்.
படர்ந்த
ஆல மரம்

விழுதுகள்
படர்ந்த
ஆல மரம்

வேர்
மண் அடி
தொட்ட
ஆலமரம்

ஊர் நடப்பெல்லாம்
கண்ட
ஆலமரம்

வெத்திலை
எச்சில்
உறிஞ்சிய
மரம்

கண்ட
உண்மைகள்
விழுங்கிய
மரம்

கண்ட
காட்சி
பேச இயலா
மெளன மரம்..


12/10/2023
காலை மணி:10:24

One Comment on “கேள்விக்காரன் கவிதை”

Comments are closed.