கனவு இல்லம்/சிறகா

அரசி மும்தாஜ் மீது கொண்ட காதலில் அரசன் ஷாஜகான் தாஜ்மஹால் கட்டினான். இன்று உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப் படுகிறது. அப்படியா நான் ஆசைப்படுகிறேன், சிறியதாக இருந்தாலும் பார்ப்பவர்கள் திரும்பிப் பார்த்து அட என்ன அழகு என்று பாராட்டுவது போல் நமக்கென ஒரு வீடு கட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

திருமணமாகி 15 வருடங்களில் இது வரை தனக்கென எதையும் கேட்காத மனைவி சொன்ன வார்த்தைகள் மனதிற்குள் ஊடலாடிக்கொண்டிருந்தது.

ஒருவழியாக முயற்சித்து இந்த வீட்டை கட்டி முடித்து அவளை அழைத்துக் கொண்டு வந்து காட்டியதும் ஆச்சரியத்தில் சந்தோஷம் பொங்க கண்களில் நீர் பெருகியது.

கையளவு நிலத்தில் எவ்வளவு பிரமாதமாக கட்டியிருக்கிறார் என்று அந்த கிராமத்தில் இருப்பவர்களும், சுற்றுவட்டார மக்களும் வியந்து பாராட்டி செல்கின்றனர் எங்கள் கனவு இல்லத்தை.