
கவிதை
திமிங்கிலம் பிடிக்க
கப்பலேறி
கடல் நீரில்
குழி பறித்தேன்.
வந்து கவ்வி
வசப்படுமென்று
புலிக்கு இரையாய்
தூண்டிற்புழு தொங்கவிட்டு
மரத்திலே காத்திருந்தேன்.
தூண்டில் துளிர்த்து
இலையில் ஊர்ந்து
வசமாயிற்று
புயல்.
நீர் சுழன்று குழிந்து
பிடிபட்டது
பிரளயம்.
