எஸ்ரா பவுண்ட் கவிதை

பிரமிள் மொழிபெயர்ப்பு



நினைவுச்சின்னம்
தற்பெருமையின்
அங்கியணிந்து
நடமாடுகிறவன் நானென்கிறாய்.
ஆனால்,ஒருசில வருஷங்களில்
இந்தச் சில்லறை டம்பங்கள்
மறக்கப்பட்டுவிடும்.
இந்தக் கோணங்கி விபரம் ஏதும்
நாளைக்கு இராது.
உன் கதையோ வேறு-
நீ பூமிக்கடியில் அழுகுவாய்.
உன் பிணக்குழி மீது முளைக்கும்
புல்லுக்கு உயிர்தரும் சத்து
உன் எருவில் இருக்குமா?
சந்தேகம்தான்!