2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கவிஞர் சுகிர்தராணி , பேரா. ஸ்டாலின் ராஜாங்கம்

நன்றி :  திண்ணை 

2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 25வது (2020) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு 2020 ஆம் ஆண்டின் விருதுக்குரியவர்களாக கீழ்காணும் இரு எழுத்தாளர்களை ஒரு மனதாகத் தேர்வு செய்துள்ளது.

  1. கவிஞர் சுகிர்தராணி   கவிதைகள், பெண்ணியச் செயல்பாடுகள்     

2.பேரா. ஸ்டாலின் ராஜாங்கம்   ––            

தலித்திய நோக்கில் இலக்கிய, சமய                             

மற்றும் அனைத்து வரலாற்றுப் பிரதிகளின்       

                                 உண்மைத் தன்மையை அயோத்தியதாசர் 

                                 முறைமையில் பிரதி ஆய்வுகள்,          

                                 தமிழகத்தில் அழிக்கப்பட்ட, அடையாளம்  

                                 மறைக்கப்பட்ட பௌத்தம் பற்றிய கள 

                                 ஆய்வுகளும் என மாற்று அரசியலையும்

                              மாற்றுப் பண்பாட்டையும் உருவாக்குதல்,

ஒவ்வொன்றும் ரூ 1,00,000 மதிப்புள்ள இவ்விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.