ஒரு ரோஜாப் பூவிடம் சில கேள்விகள்/அப்பாஸ்

கவிதை வாசித்தார் : சிறகா

சொல் புதிதில் 11 வது இணைய கால கவியரங்கத்தில் வாசித்த கவிஞர் அப்பாஸ் அவர்களின் கவிதை.
சிறகா .
.

எப்படி வந்தது உனக்கு
இந்த நிறமும் அழகும்
எங்கிருந்து நீ இவைகளைப் பெற்றாய்
அடுக்கு, அடுக்காக இதழ்களோடு
நீ சிரிப்பது
எங்கு கற்றுக் கொண்டாய்
யாரிடத்தில்,
ஒரு வேளை
எங்கிருந்து இவைகளைப் பெற்றாயோ
அங்கேயே என்னை நீ
அழைத்துச் செல்ல முடியுமா,
உனக்கென்று வீடும் ஏதும் உண்டா
வாடினாலும்
மறுபடி, மறுபடி பூக்கும்
ரகசியத் தன்மையை எங்கே நீ
பெற்றுக் கொள்கிறாய்
யாவரும் உன்னை நேசிக் கும் அற்புதம்தான் என்ன
உனக்கும் எனக்கும் தூரம் எவ்வளவு
எனது காலம் பற்றித்தான்
உனக்கு ஏதாவது தெரியுமா
என்னைத் தவிர
உனது பாதுகாப்பு குறித்து
உனக்கு ஏதாவது கவலைகள் உண்டா எனக்கு எப்படி சொல்லப் போகிறாய்
ரோஜாவே.

29-.10- 2033.