சசிகலா விஸ்வநாதன்/மேக மங்கை

இனிய மாலை வணக்கம்.
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது.
சனிக் கிழமை
பதினேழாவது
இணைய கால கவியரங்கம்
மாலை மணி 6.15
கவிதையின் தலைப்பு

   

கரு நிற பூதம்
எனக்கு பயம் காட்ட,
வெள்ளி கீற்று ஒன்று
வெளிப்பட,பூதம்
ஓடிட; செம்பஞ்சு குளம்
ஒன்றில் நீல நிற அன்னம் ஒன்று
நீந்தி வரக் கண்டேன்;
அன்னத்தின்
அருகே அழகான
அரிவை ஒருத்தி
நடனமாட காண்கையில்;
அவளே சிம்மமாய்
சிலிர்த்து வர,
ஒருகணம்..
ஒரே ஒரு கணம்;
நான் அச்சமுற்றேன்;
அதிகாலை வானத்தில்
மேக மங்கையின்
விளையாட்டு; எனப்
புரிந்து தெளிந்தேன்.


4-11-2023