தங்கேஸ் கவிதை

பார்த்துக் கொண்டிருக்கும் போதே

உதிர்ந்து கொண்டிருந்த

சுடர் நட்சத்திரமொன்று

சட்டென்று என் கைகளில் 

விழுகிறது

ஒரு சொல்லாக

ஒரு சொல்லை வைத்துக் கொண்டு 

நான் என்ன செய்யப் போகிறேன்

.அதுவும் நட்சத்திர சொல்லை

உன்னினிடம்  சேர்ப்பதை தவிர