சசிகலா விஸ்வநாதன்/அமைதி அடைக

இனிய மாலை வணக்கம்.
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது செவ்வாய் கிழமை இணையகால கவியரங்கம்
மாலை மணி 6.15
கவிதையின் தலைப்பு

மௌனம் என்பது
வாய் பேசாமல் இருப்பது
மட்டும் அல்ல;

தவிர்க்க வேண்டிய
நினைவலைகளை
தயங்காமல் தவிர்.

உண்ணா நோன்பு
அது; உண்ணாமல்
இருப்பது மட்டும் அல்ல;
உண்ணும் நினைப்பை ஒழிப்பதும் அல்ல;

உண்ணும் நினைவு
தானே ஒழிவதே.

பேசும் நினைவும்
உண்ணும் நினைவும்,
எண்ணும் நினைப்பும்,
அற்ற
ஒரு விடுதலை உணர்வு.

பதிவாய் பழகிட
மதி கதியாய்
சரணடையும் அமைதியில்.



7-11-2023