மீனாக்ஷி பாலகணேஷ்/குடையும் குட்டிக் கால்களும்!

என்னிடம் உள்ள குடை 

பெரியதாக விரியும்!

அது…

என்னைவிடப் பெரியதென்று

 நான் நினைக்கிறேன்.

எப்போது மழைபெய்தாலும், 

நான் குடையுடன்

தெருவில் நடக்கும்போதெல்லாம்

மனிதர்கள் காண்பதென்னவோ எனது

குட்டிக் கால்களை மட்டும் தான்!

(ஐந்து வயதுக் குழந்தை சொன்னது!)

3 Comments on “மீனாக்ஷி பாலகணேஷ்/குடையும் குட்டிக் கால்களும்!”

  1. நடமாடும் சொரர்க்கமென குட்டிக்
    கால்களோடு குழந்தை நடக்கையில்
    வெறும் கருப்புக் குடையை எவர் கவனிப்பார்?
    கவிதை அந்த மழையில் குளித்த குட்டிப் பாதங்களைப் போல மனதை கொள்ளை கொள்கிறது.

Comments are closed.